Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்

திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்

திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்

திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்

ADDED : ஏப் 27, 2010 02:01 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், தேடப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட இருவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் கடந்த 11ம் தேதி மழை வேண்டி வருண பகவானுக்கு திருவிழா நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி வீதியுலா நடந்தது.

அப்போது, துக்க நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்ற சலவை தொழிலாளி சின்னபையன் மறுத்தார்.

ஆத்திரம் அடைந்த  அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், பால்சுப்ரமணி உள்ளிட்டோர் சின்னபையன் தாக்கினர். அவர், ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார். அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், பால் சுப்ரமணி, பூமாலை, சங்கர், ஜெயபால் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பால் சுப்ரமணி, பூமாலை, சங்கர் ஆகிய மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், ஜெயபால் ஆகிய இருவரும் நேற்று ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us